-----------------------------முயற்சி + பயிற்சி = வெற்றி-----------------------------
Thursday, 15 May 2014
கீபோர்டை மாற்றி அமைக்க - Key Tweak !!!
கீபோர்டை மாற்றி அமைக்க - Key Tweak !!!
புதிதாக கணினியை பயன்படுத்துபவர்களா நீங்கள்? கீபோர்டின் உள்ள விசைகளின் எழுத்து வரிசைகள் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தலாம். விரைவாக டைப் செய்ய முடியாமல் போகலாம். இதனால் கணினியை வேகமாக கையாள முடியாமல் போகலாம். இனி அந்த கவலையை விடுங்கள். உங்களுக்கெனவே உருவாக்கப்பட்டிருப்பது இந்த மென்பொருள். இதன் மூலம் நீங்கள் கணினியை வேகமாக கையாளலாம்.
நீண்ட நாட்கள் கணினியை பயன்படுத்துபவர்களுக்கு கூட ஒரு சில கீ செட்டிங்ஸ் பிடிக்காமல் இருக்கலாம்.. அல்லது தேவையற்றதாக (unwanted keys)இருக்கலாம். அதையும் இந்த மென்பொருளின் துணைகொண்டு செயல்படாமல் செய்யலாம். அனைவருக்கும் பயன்படும் பயனுள்ள மென்பொருள்தான் இந்த KeyTweak.
செய்முறை:
இம்மென்பொருளை நிறுவியவுடன், இதில் விசைப்பலகையின் அமைப்பு காட்டப்படும்.
இதில் நாம் வேண்டிய மாற்றங்களை செய்துகொள்ள Choose New Remapping என்பதில் பிடித்தமான புதிய விசையைத் தேர்வு செய்தகொண்டு Remap key என்ற பட்டனைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் Apply என்ற பட்டனைக் கிளிக் செய்து கணினியை ஒருமுறை Restart செய்துகொள்ளுங்கள்.
பிறகு நீங்கள் தட்டச்சிடும்போது விசைப்பலகையில் நீங்கள் மாற்றிய அமைப்பு வேலை செய்யும்.
குறிப்பு: அனைத்து மாற்றங்களையும் செய்துவிட்டு ரீஸ்டார்ட் செய்வது முக்கியம். இல்லை யென்றால் நீங்கள் மாற்றிய விசைப்பலகையின் அமைப்பு செயல்படாது.
டவுன்லோட் செய்ய சுட்டி:
http://www.ziddu.com/download/16342039/KeyTweak_install.exe.html
நீண்ட நாட்கள் கணினியை பயன்படுத்துபவர்களுக்கு கூட ஒரு சில கீ செட்டிங்ஸ் பிடிக்காமல் இருக்கலாம்.. அல்லது தேவையற்றதாக (unwanted keys)இருக்கலாம். அதையும் இந்த மென்பொருளின் துணைகொண்டு செயல்படாமல் செய்யலாம். அனைவருக்கும் பயன்படும் பயனுள்ள மென்பொருள்தான் இந்த KeyTweak.
![]() |
| Free keyboard re maper |
- இதன் மூலம் விசைப்பலகையில் எழுத்துக்குரிய விசைகளை நமக்குப் பிடித்த எழுத்துக்களின் விசைகளாக மாற்றிக்கொள்ளலாம்.
- Q,W, E, R, T, Y என்று தொடரும் வரிசையை A,B, C,D, E, என்ற வரிசை
- ஆக மாற்றலாம்.
- உதாரணத்திற்கு Q -க்கு பதிலாக A வையும், W -க்கு பதிலாக B வையும் சேர்க்கலாம்.
- இதேபோல் அனைத்தை எழுத்துக்களையும் (A -Z) வரிசையாக மாற்றி அமைத்துக்கொண்டு எளிதாக விசைப்பலகையை பயன்படுத்தலாம்
- இம்மென்பொருளின் முக்கிய பயனே நாம் எழுத்துக்களை தேடித் தேடி அடிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் செய்வதுதான்
- மேலும் தேவையில்லாத பயன்படுத்தாத எழுத்துக்குரிய விசைகளை செயல்படாத வண்ணம் முடக்கலாம்.
- அதாவது அந்த விசையை அழுத்தினால் எந்த வித எழுத்தும் விழாமல் செட் செய்யலாம்.
- இது எவ்வாறு செயல்படுகிறது என்றால் நம்முடைய கணினியின் மைக்ரோசாப்ட் Scan code map Registry யின் செட்டிங்ஸ்களை மாற்றியமைத்து விசைப்பலகையை நம் விருப்பத்திற்கேற்ப மாற்றிவிடுகிறது.
- இதில் இருக்கும் மற்றொரு வசதி நாம் ஏற்படுத்திய மாற்றங்கள் பிடிக்கவில்லை எனில் reset என்ற பட்டனை அழுத்தி மீண்டும் பழைய நிலைக்கே கொண்டுவந்துவிடலாம்.
- தனிப்பட்ட ஒவ்வொரு விசையையும் செயல்படுத்த/செயலிழக்கச் (enable or disable)செய்யும் வழிமுறையும் இதில் இருக்கிறது.
- அதோபோல் இம்மென்பொருளில் நமக்குத் தெரிந்த விசைப்பலகை அமைப்புக்கும் மாற்றிக்கொள்ளக் கூடிய வசதிகளும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
- அதாவது நாம் பாமினி, வானவில் போன்ற விசைப்பலகை கொண்டு தட்டச்சிட வேண்டுமானால் அதை இம்மென்பொருள் கொண்டு மாற்றம் தட்டச்சிடலாம்.
செய்முறை:
இம்மென்பொருளை நிறுவியவுடன், இதில் விசைப்பலகையின் அமைப்பு காட்டப்படும்.
இதில் நாம் வேண்டிய மாற்றங்களை செய்துகொள்ள Choose New Remapping என்பதில் பிடித்தமான புதிய விசையைத் தேர்வு செய்தகொண்டு Remap key என்ற பட்டனைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் Apply என்ற பட்டனைக் கிளிக் செய்து கணினியை ஒருமுறை Restart செய்துகொள்ளுங்கள்.
பிறகு நீங்கள் தட்டச்சிடும்போது விசைப்பலகையில் நீங்கள் மாற்றிய அமைப்பு வேலை செய்யும்.
குறிப்பு: அனைத்து மாற்றங்களையும் செய்துவிட்டு ரீஸ்டார்ட் செய்வது முக்கியம். இல்லை யென்றால் நீங்கள் மாற்றிய விசைப்பலகையின் அமைப்பு செயல்படாது.
டவுன்லோட் செய்ய சுட்டி:
http://www.ziddu.com/download/16342039/KeyTweak_install.exe.html
அன்றாட வாழ்வில் நவீனம்
அன்றாட வாழ்வில் நவீனம்
இன்றைய நவீன உலகத்தில் கணினி இல்லாத வீடோ அல்லது அலுவலகமோ இருக்கும்மென்றால் கொஞ்சம் கஷ்டம்தான். பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை விண்ணப்பம் செய்ய இன்று கணினி பயன்படுகிறது .அன்றெல்லாம் கணினி ஒரு ஆடம்பர செலவு என்று நினைத்தவர்கள் கூட இன்று தம் பிள்ளைகளுக்கு கணினி வாங்கித்தருவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.சரி அது போகட்டும்.
என்னதான் நம்ம வீட்டுல கணினி வைத்திருந்தாலும் அதை பற்றி நமக்கு முழுசா தெரிவதில்லை. எனக்கு எல்லாம் தெரியுமே என்று நீங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது. சரி முதலில் நான் கேட்கும் ஒரு கேள்விக்கு யோசிக்காமல் பதில் கூறுங்கள் பார்போம். உதரணத்திற்கு நீங்கள் உங்கள் கணினியை இயக்க முற்படும் போது உங்கள் கணினி திரும்ப திரும்ப ரீஸ்டார்ட் ஆகிக்கொண்டே இருக்கிறது என்றால் என்ன செய்வீர்கள்?!.பதில் தெரிந்தால் விட்டுவிடுங்கள்.மத்தவங்க யோசிகிறீங்களா?!.
அங் ! உடனே கணினி சர்வீஸ் செய்பவரை அழைப்பீர் தானே. இதுதான் நாம லெவல். எதுக்கு தேவை இல்லாம எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டு. நமக்கு தெரிந்ததே போதும் என்று நினைபவர்கள் பலர். அப்படி விஞ்ஞானிகளும் ,அறிவியல் மேதைகளும் நினைத்திருந்தால் நீங்கள் இன்று உங்கள் வீட்டிலிருந்து கொண்டு எதோ ஒரு நாட்டில் இருக்கும் உறவினர்களுகோ அல்லது நன்பர்களுகோ வீடியோ காலிங் செய்ய முடியுமா. அல்லது தொலைகாட்சியில் நாடகம்தான் பார்க்க முடியுமா.அதனால் முடிந்தவரை எதாவது கற்றுகொள்ளுங்கள்.சரி நான் கேட்ட கேள்விக்கு பதில் அடுத்த கட்டுரையில் கூறுகிறேன்.அதுவரை பொருத்துருங்கள்.
பெண்களின் பாதுகாப்பு
பெண்களின் பாதுகாப்பு
நாட்டில் பெண்களுக்கு எதிராக அரங்கேறிவரும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன.யாரை சொல்லி என்ன பயன் .
"திருடர்களாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது"
என்ற பாடலை போல பெண்களுக்கு எதிரான குற்றம் செய்பவர்களாக பார்த்து திருந்தாவிட்டால் பெண்களுக்கு ஏற்படும் தொல்லைகள் தீரப்போவதே இல்லை .
சரி ,அது ஒரு புறம் இருந்தாலும் நம்மை நாமே தீயவர்களிடம் இருந்து காப்பற்றிகொள்வதே சிறந்தது.
அதற்காக இதோ உங்களுக்கு சில குறிப்புகள் .
1 . இரவு நேரங்களில் சாலைகளில் நடந்து செல்லும்போதோ அல்லது வாகனங்களில் செல்லும்போதோ ,உங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று கவனியுங்கள் .காதில் ஹெட் செட்டை மாட்டிகொண்டு தீயவர்களின் பிடியில் மாட்டி கொள்ளாதீர் .
2. எப்போதும் நண்பர்கள்,குடும்பத்தார்,அல்லது காவல் நிலையத்தின் எண்களை SPEED DIAL களில் போட்டு வைத்து கொள்ளுங்கள்.அவசரம் என்றால் உடனடியாக அழைக்க ஏதுவாக இருக்கும் .
3. என்ன நடந்தாலும் கண்களில் பயத்தை காட்டாதீர் .இந்த தைரியம் ஒன்றே உங்களுக்கு துணை நிற்கும் .நம்மால் முடியும் .பெண் ஆணுக்கு சளைத்தவள் இல்லை என்று உங்களை நீங்களே தேற்றிக்கொள்ளுங்கள் .இந்த மாதிரி நேரங்களில் கிரண் பேடி ,திலகவதி IPS ,போன்றோரை நினைத்து கொள்ளுங்கள்,தைரியம் தன்னால வரும் . (இவர்களை தெரியவில்லை என்றால் நடிகை விஜயசாந்தியை நினைத்துக்கொள்ளுங்கள்)
4. இரவு நேரங்களில் தனியாக ஆட்டோ அல்லது வாடகை கார்களில் பயணம் செய்வதைவிட பேருந்து அல்லது ரயிலில் பயணம் செய்யுங்கள் .அப்படி ரயில் அல்லது பேருந்து கிடைக்காமல் ஆட்டோ,வாடகை கார்களில் பயணம் செய்ய நேர்ந்தால், நீங்கள் வரும் வண்டியின் நம்பர் ,எங்கே வந்து கொண்டிருக்கிறீர் ,இன்னும் எவ்வளவு நேரத்தில் வந்து சேர்வீர் போன்ற தகவல்களை உங்கள் பெற்றோருக்கு அல்லது நீங்கள் பார்க்க செல்லும் உறவினர்களுக்கோ,வாகன ஓட்டுனர் காதில் விழும்படி போனில் பேசி தெரியப்படுத்துங்கள் .உண்மையாக, பேச யாரும் இல்லை என்றாலும் சும்மாவது போனில் பேசுவது போல் நடிங்க !
5.வெளியில் செல்லும் போது ஆடை விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.எப்போதும் பாதுக்காப்பான ஆடைகளை அணியுங்கள்.பிறர் மனதை தூண்ட கூடியது போன்ற ஆடைகள் எப்போதும் உடுத்த வேண்டாம்.என் மனதுக்கு பிடித்த ஆடைகளை நான் உடுத்த எனக்கு உரிமை இல்லையாயென்றால்? .அதெல்லாம் இருக்கிறது .ஆனால் நம்மை நாமே காப்பற்றிகொள்ளத்தான் இத்தன்னையும்.
Subscribe to:
Posts (Atom)
