Saturday, 17 September 2016

பழமொழிகள்

பழமொழிகள்

நமது வழக்கிலே சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்று சொல்லுவார்கள்..
அதற்கு சரியான உதாரணம்.பழமொழிகள்:


  • அகத்தினழகு முகத்தில் தெரியும்.

  • அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.

  • அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.

  • அடியாத மாடு படியாது.

  • அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது.

  • அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.

  • அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.

  • அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.

  • அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.

  • அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.

  • அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.

  • அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.

  • ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.

  • ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.

  • ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.

  • ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.

  • ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.

  • ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.

  • ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.

  • ஆழம் தெரியாமல் காலை விடாதே.

  • ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை.

  • ஆறிலும் சாவு நூறிலும் சாவு.

  • ஆனைக்கும் அடிசறுக்கும்.

  • இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.

  • இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.

  • உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.

  • உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?

  • எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.

  • எறும்பூரக் கல்லும் தேயும்.

  • ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.

  • ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.

  • ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

  • கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.

  • கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.

  • கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.

  • கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.

  • கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?

  • கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.

  • கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.

  • கழுதை அறியுமா கற்பூர வாசனை?

  • காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.

  • காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.

  • காகம் திட்டி மாடு சாகாது.

  • காய்த்த மரம்தான் கல்லடிபடும்.

  • காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.

  • காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.

  • கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?

  • குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.

  • குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.

  • குரங்குப் புண்ணுக்கு அருமை காட்டினால் கொப்பிலே கொப்பிலே தாவுமாம்.

  • குரைக்கிற நாய் கடிக்காது.

  • கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.

  • கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.

  • கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.

  • கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.

  • சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.

  • சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்.

  • சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.

  • சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.

  • சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?

  • தடியெடுத்தவன் தண்டக்காரன்.

  • தம்பியுள்ளான் படைக்கஞ்சான்.

  • தன் வினை தன்னைச் சுடும்.

  • தனிமரம் தோப்பாகாது.

  • தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.

  • தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.

  • தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.

  • தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.

  • தெய்வம் வரங் கொடுத்தாலும் பூசாரி விடாதது போல்.

  • நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன?

  • நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.

  • நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.

  • நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல்.

  • நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.

  • நிறைகுடம் தளம்பாது.

  • பசி வந்தால் பத்தும் பறந்திடும்.

  • படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.

  • பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.

  • பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.

  • பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.

  • பனை மரத்தடியில் பால் குடித்தது போல.

  • பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.

  • பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார்.

  • பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.

  • புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெழுப்பான்.

  • புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.

  • பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.

  • பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.

  • போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.

  • மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

  • மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.

  • மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

  • முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.

  • முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.

  • முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.

  • மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.

  • யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.

  • யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.

  • விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.

  • விரலுக்குத் தக்கதே வீக்கம்.

  • விளையும் பயிரை முளையிலே தெரியும்.

  • வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.

  • வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.

  • வெளுத்ததெல்லாம் பாலல்ல.

  • வேலிக்கு ஓணான் சாட்சி.

  • வைக்கோற் போர் நாய் போல

இதில் உங்களுக்கு பிடித்த பழமொழியை சொல்லுங்கள்..

2 comments:

  1. thanks
    விரலுக்குத் தக்கதே வீக்கம்.

    ReplyDelete